endrum anandam - என்றும் ஆனந்தம் -

Em       B  Em
என்றும் ஆனந்தம்
             C      Em
என் இயேசு தருகிறார்
             D
துதிப்பேன் துதிப்பேன்
C         D              Em
துதித்துக் கொண்டேயிருப்பேன்
.
                        Bm
அல்லேலூயா ஆனந்தமே
D             G      Em
அல்லேலூயா ஆனந்தமே
.
   Em                    B7        Em
1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
D       C     Em
என்றும் தங்குவேன்
Am        D      Am          D
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
C      D        Em
என்றே சொல்லுவேன்
.
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
.
3. வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
.
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
.
5. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
.
6. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்
.
7. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்


Eṉṟum āṉantam
 Eṉ iyēcu tarukiṟār 
Tutippēṉ tutippēṉ 
Tutittuk koṇṭēyiruppēṉ . 

Allēlūyā āṉantamē 
Allēlūyā āṉantamē . 

Uṉṉatar maṟaivil 
vallavar niḻalil 
Eṉṟum taṅkuvēṉ 
Tēvaṉai nōkki aṭaikkalap pāṟai 
Eṉṟē colluvēṉ . 

Tamatu ciṟakāl 
eṉṉai mūṭi 
Kāttu naṭattuvār 
Avaratu vacaṉam āviyiṉ paṭṭayam 
Eṉatu kēṭakam . 

Vaḻikaḷilellām 
eṉṉaik kākka 
Tūtarkaḷ eṉakkuṇṭu 
Pātam kallil mōtāmal kāttu 
Karaṅkaḷil ēntuvār 

Ciṅkattiṉ mēlum 
pāmpiṉ mēlum 
Naṭantē celluvēṉ 
Cāttāṉiṉ cakala valimaiyai vella 
Atikāram eṉakkuṇṭu

No comments:

Post a Comment